விவசாயிகள் முதலமைச்சருக்கு பாராட்டு


  
    காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட செய்தமைக்காக, காவிரி பாசன விவசாயிகள் சார்பில் தஞ்சாவூரில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
    இதற்காக ஹெலிகாப்டர் மூலம் இன்று தஞ்சாவூர் சென்ற முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாய அமைப்புகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் இந்த பாராட்டு விழாவில், மாநில அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
    இந்த விழாவில் பேசிய விவசாயிகள், தமிழகத்துக்கான காவிரி நீரை உச்ச நீதிமன்றம் மூலம் பெற்றுத் தந்தமைக்காக முதலமைச்சருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியின் இறுதியாக ஜெயலலிதா ஏற்புரை நிகழ்த்தவுள்ளார்.